இன்றைய இளைய தலைமுறையினரையும், நேற்றைய இளைய தலைமுறையினரையும் சற்றே சிந்திக்க வைக்கிறது இப்படம்.
பார்த்ததில் தோன்றியது:
நாமெல்லாம் நடந்து சென்று படித்துவந்த காலம் அது, கால்களில் செருப்பு கூட தேவையில்லை, ஏனெனில் அந்த அளவிற்கு வெயில் கொடுமையும் இல்லை. எங்கு காணினும் மரங்கள், செடிகள், நீரோடைகள் கூட செல்லும் வழியில் காணலாம். இதை மிகவும் தத்ரூபமாக விளக்குகிறது இப்படம்.
பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக உள்ளதல்லவா அந்த பின்புலக் காட்சி. சிறுமியின் கைகளில் மஞ்சள் பை. உள்ளே சிலேட், தலையில் இரட்டை சடை. இதை வரைந்த ஓவியருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றைய கல்வி மற்றும் சுற்றுச்சூழல் நிலை பற்றி விளக்குகிறது நடுவில் உள்ள படம். இதனை நாகரிக முன்னேற்றம் என்பதா? இதன் பின்புலக்காட்சி விளக்குவதன் பொருள் புரிந்தவர்கள் கண்களில் இந்நேரம் நீர் வழியும். நாம் வாழ இன்று காட்டை அழித்து, நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.
இதைவிட கொடுமை, இப்படம் விளக்கும் நாளைய படம். இப்போதே இந்நிலை வந்துவிட்டது. கிராமங்களில் குடிக்கும் நீர் கலன்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. இதற்கும் ஒரு படி மேலே, சென்னையில் நாம் சுவாசிக்கும் காற்று, கலன்களில் அடைத்து விற்பனைக்கு வந்துவிட்டதை அறியலாம்.
நமது முன்னோர்கள் நமக்காக வைத்துச் சென்றவை எல்லாம், நாம் பயன்படுத்த மட்டுமே, மாறாக அதனை அழிக்கவோ, நாசப்படுத்தவோ, சுரண்டி விற்கவோ யாருக்கும் அனுமதியில்லை. காசு பணம் சம்பாதித்துவிடலாம். வளங்களை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு மரத்தை வளர்ப்பதற்கு ஆகும் காலம் மற்றும் பெய்யும் மழையை நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக்காட்ட முடியுமா? என்பவை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
வருங்கால சந்ததியினருக்கு நாம் எதனை வைத்துவிட்டுச் செல்லப் போகிறோம்...கேள்விக்குறியாய் முடிக்கிறேன்..????
#expectkids
No comments:
Post a Comment