முழங்கால் வலியினாால் மிகவும் அவதிப்படுவதாகக் கூறினார்கள்.
பிரண்டையை பயன்படுத்தும்படி ஆலோசனை கூறி அனுப்பினேன்.
கடந்த 20 நாட்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை அரைத்துத் துவையல் செய்து சாப்பிடச் சொன்னேன். அதன் பிறகு கடந்த 1 வாரமாக வலி சிறிதுகூட இல்லை என்று கூறியதோடு அல்லாமல் மேலும் உடல்சோர்வும் அறவே இல்லை எனத் தெரிவித்தார்கள்.
பிரண்டையில் உள்ள அதிகபட்ச சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) தான் நமது எலும்பு மச்சையில் உள்ள திரவம் அதிகமாகச் சுரக்கக் காரணமாகிறது.
அதுமட்டுமின்றி வாயில் தொடங்கி மலவாய் வரையில் உருவாகக்கூடிய 300 விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்து பிரண்டை என்று போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சிறுகுடலில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் அனைத்தும் பிரண்டையால் உடனடியாகக் குணமாகும். இதை மருத்துவராக எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
பிரண்டை உப்பைச் சுமார் 300mg தேனில் கலந்து அல்லது நெய்யில் குழைத்து தினந்தோறும் உண்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றபடுகிறது.
சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முழுவதும் உடலிலிருந்து வெளியேறுவதை உடனடியாக நாம் உணரலாம்...
பெண்களுக்கு, மாதவிடாய் நேரங்களில் ஏற்படக்கூடிய இடுப்புவலி மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றிற்குப் பிரண்டைத் துவையல் (அ) உப்பைப் பயன்படுத்தினால் வலி சரியாகிவிடும்.
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடுகளுக்கு இது ஒரு அருமருந்து..
மூலம் நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. இதனால் தான் இந்த மூலிகையை "குதரோக நாசினி" என்று ஆயுர் வேதத்தில் குறிப்பிடுகிறார்கள்.
இதுபோன்று வயிறு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் பிரண்டையால் குணமாகச் செய்யலாம்.
மேலும் இயற்கையான கால்சியம் சத்து மிக அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு மகத்துவம் இருக்க நாம் எதற்காக தேவையில்லாமல் கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிட்டு நமது சிறுநீரகங்களைப் பாழாக்க வேண்டும்.
வைரத்தினைப் பிரண்டை சாற்றினால் பொடியாக்கலாம் என்று போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே கடினமான பொருளானது வைரம் என்பதாகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பினையே உடைக்கக்கூடிய தன்மை பிரண்டைச் சாற்றுக்கு உண்டு எனலாம்.
உடலை வஜ்ஜிரம் போல ஆக்கும் என்பதினால்தானோ என்னவோ, இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது.
இதனை அனைவரும் உபயோகித்துப் பயன் பெற்றால் நான் மிகவும் மகிழ்வேன்.
இப்படிக்கு, Dr.M.C.Ramamurthy.
No comments:
Post a Comment